பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு! பிரியங்கா காந்தி அதிரடி!!

 
பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு! பிரியங்கா காந்தி அதிரடி!!


இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி செயல்பட்டு வருகிறது.உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் 2022ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி இப்போதிருந்தே தீவிரமாக பணியாற்றி வருகிறது.

பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு! பிரியங்கா காந்தி அதிரடி!!


இதற்காக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் முகாமிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 40% பெண்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு! பிரியங்கா காந்தி அதிரடி!!


பெண்களால் தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்தியாவிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web