3 நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள் உற்சாகம்!

 
3 நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள் உற்சாகம்!


தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் 14, 15ம் தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

3 நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள் உற்சாகம்!


இதனை தொடர்ந்து வருவது சனிக்கிழமையாக இருப்பதால் 16ம் தேதியும் விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை ஏற்று, அவர்களின் நலன்கருதி அக். 16ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

3 நாட்கள் தொடர் விடுமுறை! மாணவர்கள் உற்சாகம்!


இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்திற்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வார இறுதி நாளான 16ம் தேதி சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web