அதிர்ச்சி... உயிரோடு புதைந்த 2 இளைஞர்கள்... மணல் டிராக்டர் கவிழ்ந்ததில் உயிரிழந்த சோகம்!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் தொப்பூர் ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்(25). ஓட்டுநரான இவர், தனது நண்பரான தொப்பூர் அடுத்துள்ள உம்மியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(23) என்பவருடன் இன்று ஜூலை 30ம் தேதி அதிகாலை 2 மணியளவில் தொப்பூர் அருகே சந்திரநல்லூர் பகுதியில் இருந்து டிராக்டரில் மண் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
புறப்பட்ட சற்று நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது சுதாகரும் கோவிந்தராஜும் தரையில் விழுந்தனர். அவர்கள் மீது டிராக்டரில் இருந்த மண் கொட்டி மூடியது. இதில் இருவரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்த நிலையில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!