கேரளாவில் இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

 
கேரளாவில் இந்த 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, இன்று மலையோர மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேபோல், திருவனந்தபுரம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

From around the web