பணம் இல்லைன்னா ஏண்டா பூட்டு போடுறீங்க..? கடுப்பான திருடன்!

 
பணம் இல்லைன்னா ஏண்டா பூட்டு போடுறீங்க..? கடுப்பான திருடன்!

கஷ்டப்பட்டு, திட்டமிட்டு, அக்கம் பக்கம் நோட்டம் விட்டு, ஒரு வீட்டில் திருட முடிவு செய்தா இப்படியா பணமே இல்லாம வெறும் வீடா போட்டிருக்கிறது என்று நடிகர் வடிவேலு பாணியில், திருட சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால், விரக்தியாகியிருக்கிறான் திருடன் ஒருவன்.

மத்திய பிரதேச மாநிலத்தில் தான் திட்டமிட்டு, நீண்ட நாட்களாக நோட்டம் பார்த்து ஒரு வீட்டில் திருட முடிவு செய்திருந்தான் திருடன் ஒருவன். அன்று இரவு அந்த வீட்டில் திருடச் சென்றவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் திருடி செல்ல எதுவுமே கிடைக்காத விரக்தியில் வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு கடுப்பில் கிளம்பி சென்றுள்ளான்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் காடேகான் நகரில் துணை ஆட்சியர் வீட்டில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கடந்த இரு வாரங்களாக வெளியூர் சென்றிருந்த அவர், வெளியூரில் இருந்து வீட்டிற்கு திரும்பியதும், வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் கலைந்து கிடப்பதைக் கண்டார். உடனே இது குறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு, வீட்டின் வெளியே காத்திருந்தார்.

போலீசார் வந்து வீடு முழுவதும் சோதனை செய்த போது, திருடன் தன் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதுக்கு கலெக்டரே? என எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web