மீண்டும் விலை உயர்வு.. இன்று (அக்டோபர் 14) பெட்ரோல், டீசல் விலை

 
மீண்டும் விலை உயர்வு.. இன்று (அக்டோபர் 14) பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று ( அக்டோபர் 13) பெட்ரோல் 101.79 ரூபாய், டீசல் லிட்டர் 97.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் விலை உயர்வு.. இன்று (அக்டோபர் 14) பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து 2 நாட்களாக விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்து வந்த நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 14) பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ 102.10 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 97.93 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

From around the web