காதலனுடன் நெருக்கமாக இருந்த காதலி!! வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த காதலன்!! பெண்களே உஷார்!!

திருமணம் செய்வதற்கு மறுத்து விட்ட காதலியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பகிர்ந்த மதுரை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்தவர் அஜ்மல் பைசல் (25). செங்கல்பட்டு மாவட்டத்தில் இவர் பணியாற்றி வந்த போது, உடன் பணியாற்றிய 22 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் இரண்டு பேரும் ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும் தெரிகிறது. அப்போது காதலி உடை மாற்றும் போது குளிக்கும் போது அஜ்மல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இவர்களுடைய காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அஜ்மல் பைசல் பெண் வீட்டாரிடம் திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
இதனால் எழுந்த ஆத்திரத்தில் பெண்ணுடன் தனியாக இருந்த போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் அஜ்மல் பதிவிட்டார். இது பெண் வீட்டாருக்கு தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆய்வாளர் சித்ராதேவி எடுத்த நடவடிக்கையில், அஜ்மல் பைசல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.