செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

 
செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததில் இருந்து வருமான வரித்துறை சோதனையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது, திருவண்ணாமலை திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அமைச்சர் எம்.சி.சம்பத் சம்பந்தப்பட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சகோதரர் கல்லூரியில் பணியாற்றும் ஊழியரின் வீடு என வருமான வரித்துறை பட்டியல் நீண்டது.

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

இந்நிலையில் தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க ஐ.டி பிரிவின் மாநிலத் துணைச் செயலாளரும், அண்ணாநகர் தி.மு.க வேட்பாளர் மோகனின் மகனுமான கார்த்திக் மோகன் சம்பந்தப்பட்ட இடத்திலும், ஜி.ஸ்கொயர் நிறுவன உரிமையாளர் ஜி.ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.

செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

இந்த நிலையில் கரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

From around the web