பகீர்!! +1 மாணவியை கர்ப்பமாக்கிய 55 வயது உறவினர்!! தமிழகம் முழுக்கவே தலைவிரித்தாடும் பாலியல் சீண்டல்கள்!!

+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது உறவினர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருடைய தாத்தா முறை உறவினர் பழனிசாமி (55) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

உடனடியாக அவர்கள் கீரணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த செப்டம்பர் மாதம் பழனிசாமியை கைது செய்தனர். திருமயம் சிறையில் இருந்தவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா குண்டர் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவரை திருமயம் சிறையில் இருந்து அழைத்துச் சென்ற போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.