கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்!! இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு!

 
கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்!! இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதமாக கருதும் கோவிலுக்குள், சினிமா பாடலுக்கு நடனமாடி, வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டார் மனீஷா. இந்த வீடியோ வைரலாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மனீஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைனியில் பிரபலமான மகாகாளிஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்!! இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு!

இந்நிலையில், இந்த கோவிலுக்கு வந்த மனீஷா என்ற இளம்பெண், சினிமா பாடலுக்கு நடனமாடி, அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த கோவிலும் வீடியோ பதிவு செய்ய அனுமதியும் கிடையாது. இந்நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனம்!! இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு!

தாங்கள் மிக புனிதமாக கருதும் கோவிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடிய மனீஷாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர், தனது செயலுக்கு மனீஷா மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில், விதிகளை மீறி கோவிலுக்குள் நடனமாடி, அதை வீடியோவாக பதிவு செய்ததற்காக மனீஷா மீது உஜ்ஜைனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

From around the web