அகிலாஷ் யாதவ் கைது செய்யப்பட்டார்!
Oct 4, 2021, 12:15 IST
லக்கிம்பூர் கெரியில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, விவசாயிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா போராட்டத்தை பார்க்க சென்ற போது அது கலவரமானது. கலவரத்தில் உயிரழப்பும் ஏற்பட்டது. இதை பலரும் கண்டித்து வருகின்றனர்.
அகிலேஷ் யாதவ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை சந்திக்க செல்ல முயன்றார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டு சிறையில் வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுக்கவே தனது வீட்டிற்கு முன்பாக சாலையில் அமர்ந்து அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
From around the
web