நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!!

 
நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!!

நடிகை மீரா மிதுன் அவசர கோலத்தில் பப்ளிசிட்டிக்காக கண்டதையும் உளறி வைத்து வெளியிட்ட வீடியோ எல்லா பக்கங்களிலும் பரபரப்பைக் கிளப்பி, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுனை தேடி வந்தனர். எனினும் அவரது செல்போன் சிக்னல் மூலம் கேரளாவில் நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கேரளாவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!!

இதனைத் தொடர்ந்து நடிகை மீராமிதுனும், அவரது நண்பரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் வன்கொடுமை தடை சட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!!

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, நடிகை மீரா மிதுனின் பேச்சு சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும், மோதலை தூண்டும் விதமாகவும் மீரா மிதுன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

From around the web