சூப்பர் சிங்கர் 10 வெற்றியாளர் அறிவிப்பு... தட்டித் தூக்கிய கள்ளக்குறிச்சி இளைஞர்... ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசு!

 
ஜான் ஜெரோம்
ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீட்டை 19 வயசு இளைஞர் தட்டித் தூக்கியுள்ளார். சமீபமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர்ந்து செய்திகளில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்காக அடிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மாவட்டத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார் ஜான் ஜெரோம். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. ஜான் ஜெரோம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.வெற்றி பெற்றதால் 60 லட்சத்தில் வீடு கிடைத்ததாக பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்டு வருவதால் அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. அதைப் பற்றி பார்ப்போம். விஜய் டிவியில் அதிக ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதை மக்கள் விரும்புவதால் பல புதுமையான ஷோக்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு முறைகளில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பாட்டு மட்டுமே முக்கியமாக இருந்த நிலையில், தற்போது பாடலுடன் காமெடி கலாட்டாவும் பழைய நினைவுகளும் கிளறிவிடுகின்றன. இதுதவிர செண்டிமெண்ட் காட்சிகளும் ரசிகர்களை அவ்வப்போது பார்க்க வைக்கிறது. இந்நிலையில் பிரமாண்டமாக தொடங்கிய சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. இறுதிப்போட்டிக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பாடகர் ஜான் ஜெரோம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால், நிகழ்ச்சி பிரமாண்டமாக நிறைவடைந்தது.

அவருக்கு முதல் பரிசாக 60 லட்சம் மதிப்புள்ள வீடும் வழங்கப்பட்டது. 60 லட்சம் பரிசு பெறுவது குறித்து பேட்டி ஒன்றில் ஜான் ஜெரோம் பேசியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, பல எதிர்ப்புகளுக்கு பிறகே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எனக்கு 19 வயதுதான் ஆகிறது. இந்த நேரத்தில் நான் வென்று அப்பா அம்மாவுக்கு 60 லட்சம் வீடு கொடுப்பேன் என்று நினைக்கவில்லை. இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று எல்லோரும் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தாலும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றால் நிகழ்ச்சியில் கிடைக்கும் வீட்டை என்ன செய்வீர்கள் என்று பலர் கேட்பார்கள். அந்த வீட்டில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்பதே என் ஆசை என்று அப்போது சொல்லிக்கொண்டிருந்தேன்.

கடைசியில் நான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொன்னபோது, ​​நான் வானத்தில் பறப்பது போல் உணர்ந்தேன். இந்த வயதில் என் பெற்றோரை நினைத்து பெருமைப்பட்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.  கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல அரசியல் பிரமுகர்கள் அங்கு சென்று வந்ததால் ஊரை பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான் ஜெரோம் வெற்றி பெற்றதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web