undefined

 அலுவலகத்தின் மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. சிசிடிவி பார்த்து அதிர்ந்த போலீசார்!

 
 

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், தான் பணிபுரிந்து வரும் அலுவலக கட்டிடத்தில் மாடியில் இருந்து கீழே இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்டார். மாடியில் இருந்து குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, தனது செல்போனில் பேசிக்கொண்டே 27 வயதுடைய இளம்பெண் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருப்பது சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருக்கிறது. 

இச்சம்பவம் நேற்று காலை 11:15 மணியளவில் நிகழ்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காலை 11:15 மணியளவில் நிகழ்ந்தது மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அவர் தற்கொலை செய்து கொண்டதாக கனடியா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.பி.யாதவ் தெரிவித்துள்ளார், ஆனால் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன் புல்புல், தனது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு, அவரது அழைப்பு விவரங்கள், யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!