ஜூலை முதல் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை... இல்லத்தரசிகள் வரவேற்பு! 

 

 தமிழகத்தில் செப்டம்பர் 2023 முதல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 மகளிர் உரிமைத் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக அவரவர்  வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை நேற்று மே 15ம் தேதி வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தகுதி இருந்தும் சிலருக்கு பணம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பரிசீலணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அவர்களது விவரம் பட்டியல் குறித்து தமிழக அரசு ஏற்கனவே விண்ணப்பங்களைப் பெற்றுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விடுபட்டவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கப்படும் எனத் தகவல்கள்  வெளியாகியுள்ளது.  விடுபட்ட தங்களுக்கு பணம் கிடைக்க செய்யுமாறு தமிழக அரசுக்கு பெண்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!