சுடுகாட்டில் காதலனை தீர்த்துக்கட்டிய பெண்ணின் வீட்டார்.. காதலியின் தந்தை வெறிச்செயல்..!

 

சென்னை தாம்பரம் புது பெருங்களத்தூர் அடுத்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஜீவா (22). இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா தெருவில் வசிக்கும் கோவிந்தன் மகள் நதியாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவர்களது காதல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜீவா தனது நண்பர்கள் 5 பேருடன் காதலி வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்துவிட்டு திரும்பி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கோவிந்தன், விஜய் மற்றும் சிலருடன் (மொத்தம் 5 பேர்) ஜீவாவை குண்டுமேடு சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று பலமாக தாக்கியுள்ளனர். இதில்  ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த கோவிந்தன் மற்றும் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்நிலையில், இன்று காலை சுடுகாட்டில் ஒருவர் இறந்து கிடப்பதாக பீர்க்கன்காரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க