undefined

வெளிநாட்டு வேலையை விடாத மனைவி.. விரக்தியில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தையும் தற்கொலை!

 

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள தருமபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (41). கட்டிட தொழிலாளி இவரது மனைவி உமா (37). இவர்களுக்கு ராபின் எபினேசர் (14) என்ற மகனும், காவ்யா (10) என்ற மகளும் உள்ளனர். எபினேசர் 6ம் வகுப்பும், காவ்யா 4ம் வகுப்பும் படித்து வந்தனர். ரமேஷின் மனைவி உமா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றார். இது தொடர்பாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் உமா வெளிநாட்டிலையே வேலை பார்த்து வந்துள்ளார். ரமேஷ் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஆனால், உமாவை வேலையை விடுமாறு அவரது கணவர் செல்போனில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரமேஷ் மனமுடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குழந்தைகளுடன் தூங்கச் சென்ற ரமேஷின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். யாரும் கதவை சாத்தவில்லை.

சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது 3 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரமேஷ், குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் விஷம் கொடுத்து மயங்கி விழுந்தபோது, ​​தூக்கிலிட்டுள்ளார். பின்னர் அவரும் வாழைப்பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!