அதிர்ச்சி... விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை!

 

தமிழ் திரையுலகின்  பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் மீது  சமீபத்தில் ரகுமான் நிகழ்ச்சி குளறுபடியில்  குற்றம் சாட்டப்பட்டு பெரும் சர்ச்சை உருவானது. இதற்காக வழக்கு தொடர்வேன் என ஆவேசமாக பேசியிருந்தார். 

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர்  விஜய் ஆண்டனி. இவருடைய மகள் மீரா சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள அவரது  வீட்டில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று இரவு சீக்கிரமாகவே உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணிக்கு  அவரது தந்தை படுக்கை அறையில் பார்க்கையில் துப்பட்டாவால் பேன் ஊக்கில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய் ஆண்டனி  பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மீராவை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அத்துடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு   காவேரி மருத்துவமனைக்கு போலீசார் சென்றுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை