செம... 60 ஆண்டுகளில் முதன் முறையாக திருச்சி என்ஐடியில் சீட் பெற்ற பழங்குடியின மாணவிகள்!  

 


இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புக்களை பொறுத்தவரை ஜேஇஇ நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்.  இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் கோச்சிங் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. சில பள்ளிகள் தாமாகமுன் வந்து இந்த வகையான பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைத் தயார் செய்கின்றன. 


பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா  இருவரும் 2024ம்  வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை  படைத்துள்ளனர். இந்நிலையில் இலுப்பூரில் வசித்து வரும்  ரோகிணி என்ற மாணவி வேதிப்பொறியியல் எடுத்து திருச்சி என்ஐடி கல்லூரியில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அதே போல்  அந்த கல்லூரியில் கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியில் படிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். திருச்சி என்ஐடியை பொறுத்தவரை  கடந்த 60 ஆண்டுகளில்  சீட் பெற்ற முதல் பழங்குடியின மானவிகள் என்ற பெருமையை  பெற்றுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!