செம... மோடி பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர்கள்!

 

 இந்தியாவின் பிரதமராக 3 வது முறையாக நாளை  மே 9 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு  மோடி பதவி ஏற்க உள்ளார்.  முன்னதாக 8 ம் தேதி பதவி ஏற்பு விழா நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.   பதவி ஏற்பு விழாவில் உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில்  மே 9 ம் தேதி இரவு 8மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.   


பிரதமர் மோடியின் இந்த  பதவி ஏற்பு விழாவிற்கு உலகம் முழுவதும் 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின்படி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இவர்களுடன்  புதிய நாடாளுமன்றத்தை கட்டிய கட்டிட தொழிலாளர்கள், வந்தே பாரத் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களை வடிவமைத்தவர்கள்,  துப்புரவு பணியாளர்கள், திருநங்கைகள் உட்பட பலரை  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளுமாறு  பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இவர்கள் அனைவரும் விவிஐபி வரிசையில் அமர வைக்கப்படுவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!