வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... புதிய உச்சம் தொட்ட தங்கம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ110 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8230க்கும், சவரனுக்கு ரூ880 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ65, 840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ2 உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒருகிராம் வெள்ளி ரூ112க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ112000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!