இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு... நகை, பணத்துடன் தேசிய விருதுகளையும் திருடிச் சென்ற கொடுமை!

 

மதுரை உசிலம்பட்டியில் உள்ள இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் புகுந்த திருடர்கள், வீட்டில் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றுடன் அவர பெற்றிருந்த தேசிய விருதுகளையும் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பிரபல திரைப்பட இயக்குநரான இவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது சொந்த வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலையாக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார். உசிலம்பட்டி வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட திருடர்கள், திட்டமிட்டு அவரது வீட்டில் திருடியுள்ளனர்.

உசிலம்பட்டியில் அவரது  வீட்டில் அவர் வளர்த்து வரும் நாய்க்கு அவரது டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் தினசரி சென்று உணவு கொடுத்துச் செல்வார்கள். இதன்படி நேற்று மாலை நாய்க்கு உணவளிக்க நரேஷ்குமார் சென்றிருந்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதில் இயக்குனரின் திறமைக்காக கொடுக்கப்பட்ட விருதுகளும் திருடு போயிருப்பதை கண்டு வேதனை அடைந்தனர். கடைசி விவசாயி திரைப்படத்திற்காக, மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!