பகீர் வீடியோ.. தந்தையின் கவனக்குறைவு.. வணிக வளாகத்தின் மாடியில் இருந்து கீழே விழும் பிஞ்சுக் குழந்தை!

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் நகரில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் தந்தையின் கையிலிருந்து ஒரு வயது குழந்தை விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

மாடியில் இருந்து விழுந்த குழந்தை விழுந்த இடத்தில் மக்கள் கூடுகிறார்கள். இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்ற போதிலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தேவேந்திர நகர் காவல் நிலையம் விசாரணை நடத்தி வருகிறது.

இது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து வருகிறது. கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளால் தினமும் உயிரிழப்பு ஏற்படுகிறது. குழந்தையை கையாளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்