ரவுடி ஓட ஓட விரட்டிக் கத்தியால் குத்தி படுகொலை... தலைநகரில் பரபரப்பு.. !

 

சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் வசித்து வருபவர்  பிரபல ரவுடி வெங்கட்ராமன்.  24 வயதாகும்  இவர் மீது  கொலை முயற்சி , அடிதடி  என  9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு வெங்கட்ராமன்  வீட்டிற்கு அருகே   நடந்து சென்று கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல்    தகராறில் ஈடுபட்டது.   ஆத்திரத்தில் வெங்கட்ராமன், அந்த கும்பலைத் தாக்க முயற்சித்தார்.   இதனால் பதிலுக்கு அந்த கும்பல் கத்தியால் வெங்கடராமனை சராமாரியாக வெட்டத் தொடங்கியது. அலறிய படியே   உயிருக்குப் பயந்து வெங்கட்ராமன்  தப்பி ஓட முயற்சித்தார்.

ஆனால் அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட துரத்தி சென்றது.ஓடிய போது ஒரு இடத்தில்  வெங்கட்ராமன் சாலையில் தடுமாறி கீழே விழுந்தார். பின்னாலேயே துரத்தி வந்த மர்ம   கும்பல் கத்தியால் ரவுடி வெங்கட்ராமனை சராமாரியாக வெட்டி விட்டுத் தப்பித்துச் சென்றது. இந்த திடீர் தாக்குதலில்   வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.ரவுடிகள்  தகராறை கண்டதும் உடனடியாக  அப்பகுதி மக்கள்   காசிமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்து வருவதற்குள் கொலை சம்பவம் நடந்து விட்டது.

இதனையடுத்து  ரவுடி வெங்கட்ராமன் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.   முதற்கட்ட விசாரணையில் வெங்கட்ராமனுக்கும், மர்மக்கும்பலுக்கும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   மேலும்  கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரை  வளைத்து பிடித்து விசாரணை நடத்தி  வருகின்றனர். ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க