செம்மரக் கடத்தலை தடுக்க முயற்சித்த காவலர் கைது... பரபரப்பு....!

 

ஆந்திர மாநிலம்  வனப்பகுதியில் செம்மர கடத்தல் காரணமாக பல குற்றவியல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.   இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும்,  மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டும்  வருகிறது.


 இந்நிலையில் ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க சென்ற காவலர் பி.கணேஷ் மீது கார் ஏற்றிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோந்து பணியின்போது, வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளார் கணேஷ். அப்போது அவரை காரில் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பித்தது தெரியவந்தது. 3 பேர் தப்பியோடிய நிலையில்  2பேர்  கைது செய்யப்பட்டார்.   7 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க