அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடிக்கும்பல்... தலைநகரில் பரபரப்பு!

 

 சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக  அழைத்து சென்றனர்.

அவர்களை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு போலீசார்  அழைத்து வந்ததும்,  அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக அந்த ரவுடிகளை விடுவிக்க கோரியும் ரவுடிகளின் ஆதரவாளர்கள் மருத்துவமனையை அடித்து துவம்சம் செய்தனர்.  இந்த மர்மநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!