அதிர்ச்சி.. காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த போலீஸ் அதிகாரி..!

 

காவல் அதிகாரி மர்மமான முறையில் காரில் இருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பை கேசில் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (44). இவர் ஊட்டி லவ்டேல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் கோவை மாவட்டம் சிறுமுகை ஆலங்கொம்பு வீராசாமி நகர் பகுதியில் மனைவி சபிதா (34) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சபிதா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை சொந்த காரில் வெளியே சென்ற சசிகுமார் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய மனைவி காவல்துறையினரிடம் விசாரித்து பார்த்தார். அவர் காவல் நிலையத்திற்கு வர வில்லை என தெரிவிக்கவே, சசிகுமாரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.



தேடிய நிலையில் தான் நேற்று இரவு சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே சசிகுமார் காரில் இறந்து கிடப்பதாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க