கல்யாணம் நடந்த சில மணி நேரத்தில் மணமகன் மரணம்... கதறித் துடித்த மணமகள்!

 

சென்னை பெரவள்ளுர் கேசி கார்டன் 6வது தெருவில் வசித்து வருபவர்  இன்ஜினியர் லோகேஷ் என்பவர் சோளிங்கநல்லூர்  பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருச்சியில் வசித்து வரும்  ராஜலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது.  அதன் பிறகு மணமக்கள் பேரவள்ளூரில் உள்ள மணமகன் லோகேஷ் வீட்டிற்கு வந்தனர்.  மணமக்கள் இருவரும் ஒரு அறையில் இருந்த நிலையில் லோகேஷ் திடீரென வாய் மற்றும் மூக்கில் நுரை தள்ளிய நிலையில் மயங்கியுள்ளார்.  


உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி மணமகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணமகள் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவருடைய முதல் கணவர் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில் லோகேஷன் 2வதாக திருமணம் செய்தார்.  திருமணம் நடந்த அன்றே 2 வது கணவரையும் அவர் பறிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!