சிலியில் பயங்கர காட்டு தீ விபத்து.. 10 பேர் பலியான சோகம்..!

 

அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலியில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீ பரவாமல் இருக்க விமானம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்படுகிறது.இந்த திடீர் தீவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தீ விபத்து ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த தீயினால் காடு அழிந்து இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீயில் இருந்து அடர்த்தியான சாம்பல் புகை கடலோர நகரங்களை மூடியது மற்றும் மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தினர் என்று வால்பரைசோவின் மாநில பிரதிநிதி கூறினார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க