மொட்டை அடித்து ரவுண்டானாவை சுற்றி வந்த பாஜக தொண்டர்... அண்ணாமலை நெகிழ்ச்சி !
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முந்திரித்தோட்டத்தில் வசித்து வருபவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அதே ஊரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நண்பர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி பெறவில்லை எனில் பரமன்குறிச்சி பஜாரில் மொட்டை போட்டு ரவுண்டானாவை சுற்றி வருவேன் என சவால் விட்டிருந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததால் பாஜக பிரமுகர் ஜெய்சங்கர் நேற்று ரமன்குறிச்சி பஜாரில் மொட்டையடித்து கொண்டார். பின்னர் ரவுண்டானாவை சுற்றிச் சுற்றி வந்தார். இதை அங்கு நின்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!