”மக்களே முக்கியம்”  என பாஜகவுக்கு உணர்த்திய தேர்தல்...தமிழச்சி  ஷொட்டு!

 
 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 40 க்கு 40 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து எதிர்கட்சிகள் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. அத்துடன் 40 இடங்களில் திமுக   வென்றும் பயனில்லை என்று சொல்பவர்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...அப்படியில்லை...

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.
3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!