2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 6 பேர் பலி !
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று பல பொருட்களை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் தவறான வழியில் சென்று நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த எர்டிகா காரின் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், ஸ்விஃப்ட் டிசையர் கார் நெடுஞ்சாலையில் நுழைந்து நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த எர்டிகா கார் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!