காஷ்மீரில் பெரும் பதற்றம்.. கடுமையாக நடந்த துப்பாக்கி சண்டை.. ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை!

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களுடன் காஷ்மீர் மாநில மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். குப்வாரா மாவட்டம் கம்காரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். ராணுவ மேஜர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!