அதிர்ச்சி.. தாசில்தாரை இரும்பு கம்பியால் தாக்கி கொடூர கொலை.. வீட்டின் முன் நடந்த பயங்கரம்.!

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புறநகர் தாசில்தாராக சனபால ராமையா பணியாற்றி வந்தார். விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அவருக்கு போன் செய்துள்ளார். அப்போது தாசில்தார் வீட்டில் இருந்து இறங்கி அந்த நபரிடம் பேசிக் கொண்டிருந்தார்.



அப்போது, ​​தாசில்தார் பின்னால் வந்த மர்மநபர்கள் இரும்பு கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் தாசில்தார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.நீண்ட நேரமாகியும் தாசில்தார் வீடு திரும்பாததால், அவரது மனைவி வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தாசில்தாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க