சூப்பர்... அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... 8வது ஊதியக்குழு ?

 

 இந்தியாவில் 3 வது முறை பிரதமராக நேற்று மோடி  30 கேபினட் அமைச்சர்களுடன்  பதவியேற்றுக் கொண்டார்.  மத்திய அரசிடம் 8வது ஊதியக்குழு உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. புதிய அரசு, 8வது ஊதியக்குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2025க்குள்  மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி தலைமையிலான அரசு மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவிக்க இருப்பதாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் இந்தியா முழுவதும்  ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். கடந்த காலங்களில் 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.2016 ஜனவரியில் 7வது ஊதியக்குழு  அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

8வது ஊதியக்குழுவில் பல்வேறு படிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ஆக இருக்கும் நிலையில், 8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!