சிறுமியின் முன் சுய இன்பம்.. குற்றம் சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி நிரபராதி என விடுவிப்பு..!

 

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மருத்துவர் சுதிப்தா மொஹந்தி (33). அவர் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீக்கனஸ் மருத்துவ மையத்தில் முதன்மை மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பாஸ்டனுக்கு ஹவாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

அந்த விமானத்தில் 14 வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 14 வயது சிறுமியின் முன்பு விமானத்தில்  கழுத்து வரை போர்வையால் மூடிக்கொண்டு மருத்துவர் சுயஇன்பத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சிறுமி முகம் சுளித்து, தாத்தா, பாட்டியிடம் இது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு பாஸ்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சுதிப்தா மொகந்தி மறுத்துள்ளார். மேலும், ஒரு டாக்டராக எனது வாழ்க்கையை மற்றவர்களைக் கவனிப்பதற்காக அர்ப்பணித்துள்ளேன். இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் வேதனைப்படுத்துகின்றன. இதையடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் நிரபராதி என கண்டறியப்பட்டது. விமானத்தில் அவர் எந்தத் தவறுகளிலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க