சிக்கன் குழம்பு சாப்பிட்ட மாணவி மரணம்... 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! 

 

பெற்றோர்களே... ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்க.. கூடுமானவரை அது எத்தனை பெரிய ஸ்டார் ஹோட்டலாகவே இருந்தாலும், அசைவ உணவுகளை வெளியே சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்க. அசைவம் சமைக்க சிக்கன், மட்டன் வாங்கும் போது, அது பழைய மாமிசமாக இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்கி சமைத்து சாப்பிடுங்க. திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், வீட்டில் முதல் நாள் சமைத்த சிக்கன் குழம்பை அடுத்த நாள் சாப்பிட்ட குடும்பத்தினர், உணவு ஒவ்வாமை காரணமாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக 12 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவரது மனைவி அன்பரசி (38). இந்த தம்பதிக்கு துவாரகா (15) இலக்கியா (12) என 2 மகள்களும் முகுந்தா என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் சமைத்து வைத்த சிக்கன் உணவை வீட்டில் உள்ள அனைவரும் சனிக்கிழமை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், முதல் நாள் வீட்டில் சமைத்த கோழிக்கறி குழம்பை அடுத்த நாள் இரவு அனைவரும் சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்