வகுப்பறையில் சுருண்டு விழுந்த மாணவன்... மாரடைப்பால் மரணம்.. 13 வயதில் கொடூரம்!
Jul 7, 2024, 06:05 IST
13 வயசெல்லாம் சாகுற வயசா என்று ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் மயங்கி சுருண்டு விழுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு வரையில் வகுப்பறையில் அத்தனை ஈடுபாட்டுடன் கேள்விகளுக்கு பதில் சொல்லி, நண்பர்களுடன் சிரித்து பேசி துடிப்புடன் இருந்திருக்கிறான் ஹரி கிருஷ்ணா. கொரோனா காலத்திற்கு பிறகு சிறுவயது திடீர் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் , வாழ்க்கை முறை என என்ன காரணங்கள் கூறிய போதிலும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. அதிலும் பள்ளி மாணவர்கள் விளையாடும் போது மரணம், உடற்பயிற்சி செய்யும் போது மரணம் என அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் சுஞ்சுபள்ளி (எம்) வித்யா நகர் சாலையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது அந்த பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 13 வயது மாணவர் ஹரிகிருஷ்ணா படித்து வந்துள்ளார். இந்த மாணவர் பள்ளியில் இருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவனுக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சிறுவன் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!