200 சிறப்பு பேருந்துகள் வார இறுதி நாட்களில் ... முன்பதிவு செய்வது எப்படி?!

 


தமிழகத்தில் மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் பண்டிகை நாட்கள், திருவிழாக்கள், தொடர் விடுமுறைகள், வார விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வார விடுமுறை நாட்களை முன்னிட்டு  மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த் அறிக்கையில்  வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும்  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மக்களின் தேவைகளின் அடிப்படையில் இவை மேலும் அதிகரிக்கவும் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட  திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

தங்களது பயணத்தை திட்டமிட பயணிகள் www.tnstc.in  என்ற அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.  இந்த அறிவிப்பால் சொந்த ஊர் திரும்புபவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!