அதிர்ச்சி வீடியோ... லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து... தீயில் கருகி 6 பேர் பலியான சோகம்!

 

ஆந்திரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கான தேர்தல் வாக்குப்பதிவும் நடைப்பெற்றது. இந்நிலையில், வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று வாக்களித்து விட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் சென்ற பேருந்து, லாரி மீது மோதி, தீப்பிடித்து எரிந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மே 13ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஹைதராபாத் உட்பட ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வாக்களிக்க வந்திருந்தனர். பின்னர், வாக்களித்து விட்டு குடும்பத்தினருடன் நேரம் செலவழித்த பின்னர், மீண்டும் தாங்கள் பணி செய்யும் ஊர்களுக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். இதனால் ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. ரயில்களிலும், பேருந்துகளிலும் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள், தீக்காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!