மீண்டும் அதிர்ச்சி... திமுக இளைஞரணி பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்!

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் திமுக பிரமுகரின் மகன் பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் வைத்தே வெட்டி கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில், திமுக இளைஞரணியைச் சேர்ந்த பிரமுகர் ஓட ஓட விரட்டி அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில், முன்னாள் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளரான முத்து (42) என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணியளவில் ராஜேஷ் எனும் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை ஒரு கார், 2 மோட்டார் சைக்கிளில்  மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. முத்து போளூர் சாலையில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையம் அருகே வந்த போது பின்னால் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளனர்.

முத்து, ராஜேஷ் ஆகிய இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததை அடுத்து அந்த கும்பல் அவர்களை வெட்ட முயன்றது. இதில் ராஜேஷ் தப்பித்து ஆவின் குளிரூட்டும் மையத்திற்குள் சென்றனர். முத்துவை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர்.

அவருக்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததை அடுத்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து தகவலிருந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து இளைஞர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனத்தில் 6 பேர் வந்தது தெரியவந்துள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!