அதிர்ச்சி.. விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த கன்னியாஸ்திரி.. தீவிர விசாரணையில் போலீசார்!

 

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஜெனட்மேரி (35). இவர் தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஊராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சின்னமனூர் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கான விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மற்ற கன்னியாஸ்திரிகள் அனைவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாக ஜெனட்மேரியின் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சக கன்னியாஸ்திரிகள் கதவைத் தட்டினர். சத்தம் வராததால் உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கன்னியாஸ்திரிகள் உடனடியாக சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜெனட் மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்