அதிர்ச்சி... இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி உடல்நலக் குறைவால் இலங்கையில் காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி!

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி, உடல்நலக் குறைவு காரணமாக இன்று இலங்கையில் காலமானார். அவருக்கு வயது 47. கேன்சர் காரணமாக காலமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார். அவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.

இளையராஜா ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என மூன்று குழந்தைகள் உள்ளனர். மூவரும் மூன்று தந்தையர்களைப் போல இசையில் ஞானம் பெற்றவர்கள்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கொண்டாடப்படும் இளையராஜாவின் மகள் பவதாரணி பல பாடல்கள் பாடி பிரபலமானார். இளையராஜாவின் விருப்பமான பாடகிகளில் பவதாரணியும் ஒருவர். இவர் சில படங்களுக்கு பவதாரணியும் இசையமைத்தார்.

இந்த நிலையில் தான் இளையராஜாவின் மகள் பவதாரணி இன்று காலமானார். அவருக்கு வயது 47 அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார், இப்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.  அதன் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார்..இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணியளவில் இறந்தார்.அவரது கணவர் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். குழந்தை இல்லை.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க