undefined

மதுரையில் அதிர்ச்சி.. 2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய கும்பல்.. 3 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்!

 

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட 14 வயது பள்ளி மாணவன் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனியில் இருந்து ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவனை கடத்திச் சென்று தாயாரை மிரட்டி ரூ.2 கோடி பணம் பறித்துள்ளனர். ஆட்டோ டிரைவருடன், மாணவனை கடத்திய கும்பல், அவரது தாய் மைதிலியை தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டுள்ளனர்.

ரூ.2 கோடி கொடுக்காவிட்டால் சிறுவனை கொன்று விடுவதாகவும், போலீசில் சென்றாலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளனர். எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் உடனடியாக களம் இறங்கி சிறுவனை தேடினர். போலீசார் வருவதை அறிந்த  கடத்தல் கும்பல் சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பியோடினர். சிறுவனை இறக்கிவிட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!