அதிர்ச்சி.. தடுப்பு சுவரில் கார் மோதி பயங்கர விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

 

திருச்சி கண்டோன்மென்ட் ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 26). திருச்சி கண்டோன்மென்ட் ஒத்தக்கடை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (60). கார் டிரைவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் காரில் திரன் நகரில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். விக்னேஸ்வரன் காரை ஓட்டினார். கருமண்டபம் டி கார்னர் என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் (சென்டர் மீடியன்) மோதியது.

காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் பாஸ்கர் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த பகுதி வளைவு பகுதி என்பதால் வேகமாக சென்றதால் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் நெடுஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் இருந்து விக்னேஸ்வரன், பாஸ்கர் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா கணேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!