ஷாக்.. அரசு பேருந்தில் கிடந்த துப்பாக்கி.. தீவிர விசாரணையில் போலீசார்!

 

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழக அரசு குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து இன்று வந்தது. பாளையங்கோட்டை எம்ஜிஆர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பேருந்து வந்தது.

அங்குள்ள ஊழியர் சுரேஷ் பஸ்சை சுத்தம் செய்ய சென்றபோது, ஒன்பதாம் எண் பஸ்சின் மேல்பகுதியை சுத்தம் செய்ய சென்றார். அப்போது அதில் அரிவாள் மற்றும் துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தடயவியல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கத்தி மற்றும் துப்பாக்கியில் இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸார் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கோவில்பட்டியை சேர்ந்த மிதுன் காந்த் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரிடம் விசாரணை நடத்த பாளையங்கோட்டை போலீசார் கோவில்பட்டி விரைந்தனர். அரசு பேருந்தில் இருந்து கத்தி, துப்பாக்கி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!