அதிர்ச்சி... 7 மாத கர்ப்பிணி மரணம்.. கருவிலேயே உயிரிழந்த சிசு.. மருத்துவர் உள்பட 3 பேர் கைது!

 

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  புதுக்குடி கரைமேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மனைவி ரமணா. இவர்களுக்கு 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் ரமணா கர்ப்பமடைந்தார். ஏற்கெனவே 2 குழந்தைகள் இருப்பதால், 3வதாக குழந்தை வேண்டாம் என்று ரமணா எண்ணினார். ஏழு மாத கர்ப்பிணியான ரமணா, இதனால் கர்ப்பத்தை கலைக்க அங்குள்ள மருந்து கடை ஒன்றில் கருகலைப்பு மாத்திரைகள் வாங்கி தின்றதாக கூறப்படுகிறது. இதில் ரமணாவுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

உடனே அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதை அடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. 

உடனே வயிற்றுக்குள் இருந்த சிசுவை மருத்துவர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு அதிகளவில் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தா.பழூர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்திதேவி, அவரது உதவியாளர் வெற்றிச்செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!