பகீர்... ஏடிஎம்மில் துப்பாக்கி குண்டுகள் விற்பனை... அமெரிக்காவில் மளிகைக் கடைகளில் நடைமுறை!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்தடுத்து உயிர்ப்பலிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுப்பதைப்போல துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக் கூடிய வகையில் மளிகைக் கடைகளில் பிரத்யேக இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனமான அமெரிக்கன் ரவுண்ட்ஸ் நிறுவனம் இத்தகைய துப்பாக்கி குண்டுகளை எடுக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த தானியங்கு வெடிமருந்து விநியோகிகள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மெஷின் விரைவில் அமெரிக்கா முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதற்கான அடையாள அட்டையை காண்பித்து, உரிய பணம் செலுத்தி தேவையான குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் AI தொழில்நுட்பம், அட்டை ஸ்கேனிங் திறன் மற்றும் முகத்தை அடையாளம் காணப்படும்” தொடுதிரையில் வாங்க விரும்பும் துப்பாக்கி குண்டுகளை தேர்ந்தெடுத்து அவர்களின் ஐடியை ஸ்கேன் செய்து இயந்திரத்தின் அடிப்பகுதியில் துளையிலிருந்து குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!