சோகம்.. கார் டயர் வெடித்து கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப பலி!

 

கடலூர் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக புதுச்சேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.  திட்டக்குடி அருகே கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென காரின் டயர் வெடித்து கார் தாறுமாறாக ஓடியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் பயங்கரமாக விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த பெண், சிறுமி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்து பட்டு அரசு பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!