நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. அருவி நீரில் மூழ்கி பலியான இளைஞர்!

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஷ்ரவன் (25). இ-காமர்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஷ்ரவன் தனது நண்பர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்மங்களூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். சிக்மங்களூரில் உள்ள ஹிபி நீர்வீழ்ச்சிக்கு சென்ற அனைவரும் அங்கு குளித்துள்ளனர்.

ஷ்ரவன் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அருவியில் இருந்து பலமாக நீர் கொட்டியது. அப்போது, ​​பாறையில் நின்று குளித்துக் கொண்டிருந்த ஷ்ரவன் திடீரென வழுக்கி விழுந்தார். அதன்பின் அருவி நீரில் மூழ்கினார்.  இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஷ்ரவனை மீட்டனர். அருவியில் குளித்தவர்களில் ஒரு மருத்துவரும் இருந்தார்.

உடனடியாக ஷ்ரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், ஷ்ரவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் ஷ்ரவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நண்பர்களுடன் அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!